நன்னூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் 42 ஒரெழுத்து ஒருமொழிச் சொற்கள் உள்ளதாக குறிப்பிடுகின்றார்.
ஆ-பசு
ஈ-ஈகை(கொடு),பறக்கும் ஈ
ஊ-இறைச்சி
ஏ-அம்பு
ஐ-தலைவன்
ஓ-மதகு
கா-சோலை
கூ-பூமி
கை-உடல் உறுப்பு,ஒழுக்கம்
கோ-அரசன்
சா-இறப்பது
சீ-இகழ்ச்சி
சே-உயர்வு
சோ-மதில்
தா-கொடு
தீ-நெருப்பு
தூ-தூய்மை
தே-கடவுள்
தை-மாதத்தின் பெயர்,தைத்தல்
நா-நாவு
நீ-ஒருவரை குறிப்பது
நே-அன்பு
நை-இழிவு
நோ-வறுமை
பா-பாடல்
பூ-மலர்
பே-மேகம்
பை-பொருட்களை தாங்கும் பொருள்,இளமை
போ-செல்
மா-மாமரம்
மீ-வான்
மூ-மூப்பு
மே-அன்பு
மை-அஞ்சனம்
மோ-முகத்தல்
யா-அகலம்
வா-அழைத்தல்
வீ-கீழே வீழ்ந்த மலர்
வை-புல்
வௌ-கவர்
நொ-நோய்
து-உண்
இந்த பட்டியலில் 'து,நொ" என்ற இரு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் எழுத்துக்கள்
௩/சுறவை/௨௦௫௩
நன்றி