சீர்
அசைகள் தனித்தோ அல்லது இணைந்தோ வந்து ஒரு பாடலுக்கு உறுப்பாய் அமைவது சீர் எனப்படும்.
சீர் நான்கு வகைப்படும்:
*ஓரசைச்சீர்
*ஈரசைச்சீர்
*மூவசைச்சீர்
*நான்கசைச்சீர்
ஓரசைச்சீர்
நேரசை தனித்து வருவது(பல்)-நாள் எனப்படும்
நிரையசை தனித்து வருவது(வலை)-மலர் எனப்படும்
நேரசை + குற்றியலுகர எழுத்துக்கள்(கு,சு,டு,து,பு,று)(பாடு)-காசு எனப்படும்
நிரையசை + குற்றியலுகர எழுத்துக்கள்(கு,சுடு,து,பு,று)(உலகு)-பிறப்பு எனப்படும்
நேரசையுடனோ,நிரையசையுடனோ இறுதியில் குற்றியலுகர எழுத்து வந்தால் அது வெண்பா எனும் பா வகையின் கடைசி சொல்லாக வரும்போது மட்டுமே அது ஓரசைச்சீராக எடுத்துக்கொள்ளப்படும்.
மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்