பாரதியார் நினைவு நாள் வெண்பா

 இன்று பாரதியார் நினைவு நாள் அதை ஒட்டி நான் ஒரு வெண்பா எழுதி உள்ளேன்

பரவை பறவை இயாஅகு மாகூண்

டடைவதற்கு அப்பரவை யேபா ரதிஉன்

தமிழ்ப்படைப்பு பல்லா யிரத்தாண் டுதன்பு

கழோஒ டுவாழி யவே


பரவை-கடல்


பொருள்

கடல் என்ன பறவை ஆகுமா கூண்டில் அடைவதற்கு.அந்தக் கடலே

பாரதி.உன் தமிழ் படைப்பு பல்லாயிரத்தாண்டு தன் புகழோடு வாழியவே. 



பாரதியாரின் நினைவு நாளான இன்று அவரை நினைவுக்கூறுவோம்.


நன்றி


௨௰௬/மடங்கல்

கருத்துரையிடுக

புதியது பழையவை