அசை
ஓர் எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்து அசைந்து (பிரிந்து) நிற்பது.
அசை இரண்டு வகை படும்:
*நேரசை
*நிரையசை
நேரசை
*ஒரு குறில்(க)
*ஓரு குறில்+ஓரு ஒற்று(கல்)
*ஒரு நெடில்(கா)
*ஓரு நெடில்+ஓரு ஒற்று(கால்)
நிரையசை
*இரு குறில்(கட)
*இரு குறில்+ஓரு ஒற்று(குளம்)
*ஒரு குறில் + ஒரு நெடில்(படா)
*ஒரு குறில் + ஒரு நெடில் + ஓரு ஒற்று(கடாம்)
ஒரு ஒற்றெழுத்தை தொடர்ந்து மற்றொரு ஒற்றெழுத்து வரும் போது அதற்கு முன்புள்ள அசையோடு அந்த குறில் இணையும்.
எ.கா
டர்ந்
டர்-என்பது நேரசை(ஓரு குறில் + ஒரு ஒற்று)
இதை தொடர்ந்து "ந்" எனும் ஒரு ஒற்று வருவதால் "டர்ந்" என்பது நேரசை ஆகும்.
மரபு கவிதை இயற்றுதல் சார்ந்த மற்ற படிநிலைகள்
௪/கன்னி