பொங்கல் வெண்பா


பூதப்பொங்கல்

புவிபூதத் தின்விறகைக் கொண்டுதீஇ  பூதத்தை

மேலிடகால் பூதத்தால் கேடும்கட் டையுமெரி

யும்புனல் பூதத்தால் பானையுள் பாவம்மூழ்

கும்சேண்பூ தத்தின்எல் லிற்குப டைத்திடவா

யிற்றாஅம் பூதப்பொங் கல்


கால்-காற்று எல்-சூரியன்

சேண்-வானம் கட்டை-விறகு

கேடு-தீமை பாவம்-தீமை


பொருள்

நிலம் என்னும் பூதத்தால் உருவான மரத்தை வெட்டி, கிடைத்த விறகின் மேல் தீபூதத்தின் நெருப்பை  மேலிட காற்று பூதத்தின் காற்றால் விறகும் தீமையும் எரியும்.பானையுள் இருக்கும் நீர்பூதத்தின் நீரால் தீமை மூழ்கும்.வான்பூதத்தின் சூரியனுக்கு படைத்திட உருவானது பூதப்பொங்கல்.



பொங்கல் நல்வாழ்த்துக்கள்


கருத்துரையிடுக

புதியது பழையவை